Tuesday, December 29, 2009

பிச்சைக்காரரிடம் திருடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்



வண்டலூரை சேர்ந்தவர் குமார்(43). ரயில்வே டிரைவர். செங்கல்பட்டு & கடற்கரை ரயிலை நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ஓட்டிச் சென்றார். கார்டு ராமதாஸ் உடன் சென்றுள்ளார். செங்கல்பட்டில் இருந்து 10.15 மணிக்கு திரும்ப வேண்டும். 45 நிமிடம் இருந்ததால் இருவரும் ரயில் பெட்டியில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் சீனிவாசன் (27) அங்கு வந்தார். ஓய்வு நேரம் என்பதால் லுங்கி அணிந்திருந்தார்.
பிளாட்பாரத்தில் படுத்திருந்த பிச்சைக்காரரின் பையில் கைவிட்டு பணத்தை எடுத்துள்ளார் சீனிவாசன்.
இதைப்பார்த்த குமாரும், ராமதாசும் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், போலீஸ்காரனான என்னையே திட்டுகிறீர்களா? என்று டிரைவர் குமாரை உயிர்நிலையில் எட்டி உதைத்து முகத்தில் குத்தியுள்ளார். அதே இடத்தில் குமார் மயங்கி விழுந்தார். ரயில்வே ஊழியர்கள் ஓடிவந்து குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் காயாம்பு வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய போலீஸ்காரர் சீனிவாசனை தேடி வருகிறார். இந்நிலையில், சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே போலீஸ் எஸ்பி உத்தரவிட்டார்.
ரயில்வே டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் சீனிவாசனை உடனே கைது செய்யக்கோரி, தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் ரயில் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Saturday, December 26, 2009

ஆண் குழந்தை திருடிய இளம்பெண் சிக்கினார்



மருத்துவமனையில் ஆண் குழந்தையை திருட முயன்ற பெண் பிடிபட்டார்.
ஆலந்தூரை சேர்ந்தவர் சங்கர். அவர் மனைவி தங்கம் (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கர்ப்பமான தங்கம், கடந்த 17ம் தேதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இவரது பக்கத்து பெட்டில் திருவள்ளூரை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி அம்மு (30) இருந்தார். இவருக்கு 18ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்கம் குழந்தையுடன் வெளியே செல்ல முயன்றார். அப்போது எதிரில் வந்த நர்ஸ், ‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்’ என்று கேட்டார். வீட்டுக்கு போவதாக தங்கம் கூறியதும், டாக்டரினம் கூறினீர்களா? டிஸ்சார்ஸ் பாஸ் வாங்க விட்டீர்களா என நர்ஸ் அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். இதற்கு பதில்கூற திணறிய தங்கம், திடீரென ஓட தொடங்கினார்.
அப்போது வார்டில் இருந்த அம்மு, தனது குழந்தையை காணவில்லை என்று அலறவே, நர்ஸ் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார். மருத்துவமனை ஊழியர்கள் விரட்டிச்சென்று தங்கத்தை பிடித்து எழும்பூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ‘எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 3வதும் பெண்ணாக பிறந்துவிட்டது. ஆண் குழந்தை வேண்டும் என்பதால், அம்முவின் குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றேன்’ என்று கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

Tuesday, December 22, 2009

போலி இன்சூரன்ஸ் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு



இதுவரை சிபிஐ விசாரித்த போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை, இனி சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி, 21 வழக்குகளில் நாங்கள் புலன் விசாரணை நடத்தி, சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டோம்.
தற்போது, மேலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் உள்ளன. இதை விசாரிக்க சிபிஐயில் போதிய ஆட்கள் இல்லை. எனவே, சென்னையில் உள்ள சிபிசிஐடி போலீசார் இந்த இன்ஸ்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
இந்த வழக்கை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். சிபிஐ தரப்பில் வக்கீல் சந்திரசேகர், இன்சூரன்ஸ் தரப்பில் வக்கீல் விஜயராகவன், தமிழக அரசு சார்பில் வக்கீல் குமரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க போதிய ஆட்கள் இல்லை என்று சிபிஐ தரப்பில் கூறியதை இன்சூரன்ஸ் தரப்பு மற்றும் அரசு வக்கீல் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியவுடன், ரூ.81 கோடி இன்சூரன்ஸ் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று இன்சூரன்ஸ் தரப்பில் கூறியதை ஏற்றுக் கொள்கிறோம்.
எனவே, எதிர்காலத்தில் வரும் போலி இன்சூரன்ஸ் மோசடி புகார்களை, சென்னையில் உள்ள சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும். இதுவரை 21 வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரித்துள்ளது. மீதமுள்ள வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்.
இதற்காக, சிபிசிஐடி போலீஸ் கூடுதல் டிஜிபி தனிப்படையை அமைக்க வேண்டும். அதன்பிறகு, போலி இன்சூரன்ஸ் மோசடி புகார் மீது விசாரித்து, சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Monday, December 7, 2009

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா???




பாலிவுட் பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களில் இன்றைய ஹாட் நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்ற செய்திதான்.

முன்னணி பத்திரிகைகள், இணையதளங்களில் வெளியாகியுள்ள இந்த செய்திகளை பச்சன் குடும்பம் ஒப்புக் கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை.

அதே நேரம் முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து சற்று ஒதுங்கியே நிற்கிறாராம் ஐஸ்வர்யா ராய். பா படத்தின் சிறப்புக் காட்சியின் போது, அவர் அமைதியாக உட்கார்ந்திருக்க, அமிதாப்பும் அவர் மகன் அபிஷேக்கும்தான் வந்த விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டனர்.

கர்ப்பத்தின் ஆரம்ப நாட்கள் என்பதால் ஐஸ்வர்யா ராயை ஓடியாடி வேலை செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுரைத்திருப்பதாலேயே இப்படி என்று செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.

இது பற்றி நிருபர்கள் கேட்டதற்குக்கூட, எந்த பதிலும் கூறாமல் சிரித்து மழுப்பினராம் மாமனார் அமிதாப்பும், ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக்கும்.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் தன் குடும்பத்தினருடன் போய் குழந்தை வரம் வேண்டி சிறப்புப் பூஜைகள் செய்தது நினைவிருக்கலாம்.

சந்தோஷச் செய்திதானே, எதற்கு இந்த மறைப்பு..?

Wednesday, November 25, 2009

டுவின்ஸ் பிறக்கும் வரை ஓயமாட்டேன் 13 குழந்தை பத்தாதாம்




ஆண் குழந்தை மோகத்தில் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வது நம் நாட்டு பெண்களின் வழக்கம். ஆனால், ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுக்கும் வரை தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக பிரிட்டன் தாய் ஒருவர் கூறியுள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் சாரா பாஸ். இவரது கணவர் ஸ்டீபன் ஸ்மித். இந்த தம்பதிக்கு கடந்த 1986ல் குழந்தை பிறந்தது. ஒரு குழந்தையே போதும் என நிறுத்திக் கொண்டனர். எனினும், 10 ஆண்டுகள் கழித்து தனது முடிவை மாற்றிக் கொண்டு இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் சாரா.

அதிலிருந்து ஆண்டுக்கொரு குழந்தை வீதம் இதுவரை 13 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். 14வது குழந்தை சாராவின் வயிற்றில் வளர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை குழந்தைகள் இருந்தும் சாராவின் ஆசை தீரவில்லை. ஆம், இரட்டை குழந்தை பெறுவதுதான் அவரது ஆசை. இந்த கனவு நிறைவேறும் வரை ஓயப்போவதில்லை என அவர் கூறுகிறார்.இதுகுறித்து சாரா கூறுகையில், உலகிலேயே குழந்தைச் செல்வம் தான் மிகவும் சிறந்தது. குழந்தைகள் என்றால் எனக்கு உயிர்.
அதனால் பிரசவம் பற்றிய பயமே எனக்கு இப்போது காணாமல் போய்விட்டது. என்னுடைய குழந்தைகள் எல்லாம் திறமையானவர்களாக உள்ளனர்.

ஒரே பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. அது நி¬வேறும் வரை ஓயப்போவதில்லை என்றார்.இவரது முதல் பிள்ளையின் பெயர் பாட்ரிக். வயது 23. கடைசி குழந்தையின் வயது 9 மாதம். இதில் பாட்ரிக்கைத் தவிர மற்ற குழந்தைகளுடன் மூன்று படுக்கையறை குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர் சாரா தம்பதி.

நடிகர் குணால் கொலை வழக்கு கைதான நடிகை லவீனாவிடம் போலீஸ் விசாரணை




நடிகர் குணால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகை லவீனா பாட்டியாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
காதலர் தினம்’, ‘புன்னகை தேசம்உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் குணால் (30). போஜ்புரி மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மும்பை புறநகர் பகுதியான வெர்சோவா பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் படுக்கை அறையில் இருந்த பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் குணால் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், குணாலின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை ராஜேந்திரா, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது மகனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பை கோர்ட் உத்தரவிட்டது. வெர்சோவா போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். தற்கொலை வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

குணால் இறந்தபோது, பிரபல பாலிவுட் நடிகை லவீனா பாட்டியா அங்கு இருந்தார் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, லவீனா பாட்டியாவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவலை வெர்சோவா போலீஸ் இன்ஸ்பெக்டர் கடேகார் தெரிவித்தார். லவீனாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Monday, November 23, 2009

சீக்கிரம் வீடு போய் சேருங்க




ஜப்பான் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வசதியாக அலுவலக நேரத்தை அந்நாட்டின் முன்னணி வங்கி குறைத்துள்ளது.ஜப்பான் மக்கள்தொகையில் 25 சதவீதத்தினர் 65 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்ஸ்.

2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களின் சராசரி குழந்தை பிறப்பு 1 சதவீதமாக இருந்தது.
அதாவது, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் ஒரு குழந்தை மட்டுமே உள்ளது.

இதனால், வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து, இளைஞர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையிலும் சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே, அதிக குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு மக்களை ஜப்பான் அரசு வலியுறுத்தி வருகிறது.அதற்கு உதவும் வகையில், மிட்சுபிஷி யுஎப்ஜே வங்கியின் பெண் ஊழியர்களின் வேலை முடியும் நேரத்தை இரவு 7 மணியில் இருந்து மாலை 5.10 மணியாக குறைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

தம்பதிகள் ரொமான்ஸ் செய்ய மாலை நேரம் சிறந்தது. நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பில் பொறுப்புள்ள நிறுவனமாக வங்கி செயல்பட திட்டமிட்டது. எனவே, பெண் ஊழியர்கள் வேலை நேரம் மாலை 5.10 வரை என மாற்றப்படுகிறது என்றார். முன்னணி வங்கியின் இந்த அதிரடி சலுகையால், தம்பதிகளுக்கு ரொமான்ஸ் டிப்ஸ் அளிப்பது, ரிசார்ட்டில் தங்கும் வசதி போன்ற மற்ற Ôஊக்குவிப்புÕ சலுகைகளை அளிக்க மற்ற நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.ம்ம்... அதெல்லாம் ஜப்பானுக்கு சரி, நம்மூரில் வேலை நேரத்தை டோட்டல் நைட் ஷிப்டாக மாற்ற வேண்டியதுதான் இல்லையா?

அமெரிக்க பெண்ணுக்கு ரூ.1,500 கோடி இழப்பீடு


நியூயார்க் : அமெரிக்காவில் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 16 ஆண்டுகள் ஆகியும் நுரையீரல் பாதிப்பால் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு சிகரெட் நிறுவனம் ரூ.1,500 கோடி இழப்பீடு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.அமெரிக்க வரலாற்றில் சிகரெட் நிறுவனம் இதுவரை இல்லாத அதிக தொகை இழப்பீடு அளிக்க உத்தரவிட்டு வெளியாகியுள்ள தீர்ப்பு இது என கருதப்படுகிறது. அந்நாட்டில், 2006ம் ஆண்டு முதல் சிகரெட் நிறுவனங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடுமையான தீர்ப்புகளை அளிக்கத் தொடங்கியது.

புளோரிடாவைச் சேர்ந்த பெண் சின்டி நாகிள். வயது 61. இவர் 1968ல் தனது 20வது வயதில் சிகரெட் பிடிக்கத் தொடங்கினார். அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பிலிப் மோரிஸ் சிகரெட்களை சின்டி புகைத்து வந்துள்ளார்.பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது நுரையீரலை எம்பைசிமா என்ற நோய் தாக்கியது. நுரையீரலின் காற்றுப் பாதைகளில் அடைப்பை ஏற்படுத்தி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுத்தும் நோய் இது. இதனால், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை அறிந்து 1993ல் அந்தப் பழக்கத்தை நிறுத்தி விட்டார் சின்டி.

அதன்பிறகு என்பைசிமா நோய்க்கு தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். 16 ஆண்டுகள் கடந்தும் குணமாகாமல், சக்கர நாற்காலியில் நாட்களைக் கடத்தும் நிலைக்கு வந்து விட்டார். இதையடுத்து, சிகரெட்டை நிறுத்தி 16 ஆண்டுகளாகியும் பாதிப்பு தொடர பிலிப் மோரிஸ் நிறுவனமே காரணம் என்று குற்றம்சாட்டி புளோரிடா நீதிமன்றத்தில் சின்டி வழக்கு தொடர்ந்தார்.

இதுபோல, 6,000 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சின்டி வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மனுதாரரின் கடந்த கால மற்றும் எதிர்கால மருத்துவ செலவாக ரூ.250 கோடியும், இழப்பீடாக ரூ.1,250 கோடியும் பிலிப் மோரிஸ் சிகரெட் நிறுவனம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக அந்நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.


வழிப்பறியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கைது


அம்பத்தூர்
அடுத்த அத்திப்பட்டு அண்ணா தெருவைச் சேர்ந்தவர் அன்பு (30). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கார் நிறுவன சூபர்வைசர்.நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அத்திப்பட்டு& வானகரம் ரோட்டில் நடந்து வந்தபோது, ஒரு கும்பல் அன்புவை வழிமறித்து தாக்கி, பாக்கெட்டில் இருந்த 5 ஆயிரம் ரூபாயை பறித்தது. போலீசில் புகார் செய்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், அன்புவை தாக்கி வழிப்பறி செய்தது அத்திப்பட்டு சின்ன காலனியைச் சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் மணி (51), அவரது நண்பர்கள் ரமேஷ், ஜெகன், ஷோபன், முனுசாமி, பிரவீன், குமார் என தெரிந்தது. இதையடுத்து, மணி உட்பட 7 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Sunday, November 22, 2009

இப்படியும் கட்டிடமா???












போலி அமெரிக்க டாலர் மூலம் தொழிலதிபரிடம் ரூ.1 கோடி மோசடி




போலி அமெரிக்க டாலர்கள் கொடுத்து தொழில் அதிபரிடம் ரூ. 1 கோடி மோசடி செய்த நைஜீரிய ஆசாமி, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். திருச்சியை சேர்ந்தவர் ஜெயகலால் பட்டேல், மரவியாபாரி. சில மாதங்களுக்கு முன்பு நைஜீரிய நாட்டை சேர்ந்த சுக்குஜுடு (37) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர், ஜெயகலாலை சந்தித்தனர். ‘‘நாங்கள் வெளிநாட்டில் உயர்ரக மரங்கள் விற்கிறோம். மிக குறைந்த விலையில் மரப்பலகைகள் கிடைக்கும்’’ என்று கூறியுள்ளனர். இதை நம்பிய ஜெயகலால், மரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். அதற்காக ரூ.50 லட்சம் கொடுத்தார்.
மேலும், சுக்குஜுடு, தன்னிடம் அமெரிக்க டாலர்கள் இருப்பதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுன்ளார். அதையும் நம்பி, ரூ.50 லட்சம் கொடுத்து, அமெரிக்க டாலர்கள் வாங்கியுள்ளார் ஜெயகலால். மரம் குறித்து ஜெயகலால் பட்டேல், சுக்குஜுடுவிடம் தொலைபேசியில் கேட்டபோது, ஓரிரு நாளில் மரம் வந்துவிடும் என்று காலம் தாழ்த்தி உள்ளார்.

இதற்கிடையில், சுக்குஜுடு கொடுத்த அமெரிக்க டாலர்களை மாற்ற முயன்ற போது அவை போலி என்று தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த ஜெயகலால், திருச்சி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுக்குஜுடுவை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு மும்பையில் இருந்து வரும் கிங்பிஷர் விமானத்தில் சுக்குஜுடு வருவதாக திருச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிங்பிஷர் விமானத்தில் வந்த சுக்குஜுடுவை விமான நிலைய போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை வந்து காலை 11 மணிக்கு கொழும்பு, அங்கிருந்து மலேசியா சென்று அங்கிருந்து நைஜீரியா செல்ல சுக்குஜுடு திட்டம் போட்டிருந்தது தெரிய வந்தது. திருச்சி போலீசார் விரைந்து வந்து சுக்குஜுடுவை நேற்று மாலை கைது செய்து அழைத்து சென்றனர்.

Saturday, November 21, 2009

கேரளாவில் போலீசார் கண் முன் சயனைடு தண்ணீர் குடித்து இறந்த விசாரணை கைதி





கேரள மாநிலம் பத்தனம் திட்டை அருகே உள்ள பொன்குன்னம் பகுதியைச் சேர்ந¢தவர் பினு(38). இவர் பத்தனம்திட்டையில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடையில் இருந்து தங்ககட்டிகளை நகைப்பட்டறைக்கு கொண்டு செல்வது மற்றும் பட்டறையில் செய்யப்பட்ட நகைகளை கடைக்கு எடுத்துவரும் வேலையை பினு செய்து வந்தார்.
சில தினங்களுக்கு முன் 1 கிலோ தங்கத்தை நகைகள் செய்வதற்காக பினுவிடம் கொடுத்து விட்டதாகவும் ஆனால் அதற்கான நகைகளை அவர் திருப்பி கொண்டு வரவில்லை என நகைக்கடை உரிமையாளர் பத்தனம்திட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பினுவை கைது செய்து விசாரித்து வந்தனர்.

அப்போது, நகைகளை அங்குள்ள சில கடைகளில் விற்றதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் பினுவை அவர் நகையை விற்றதாக கூறப்பட்ட ஒரு கடைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு திடீரென கடையில் இருந்த நகைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் சயனைடு கலந்த தண்ணீரை எடுத்து பினு குடித்தார். போலீசார் உடனடியாக பினுவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் கண் முன்னாலேயே ஒரு விசாரணை கைதி சயனைடு தண்ணீர் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பி.கு --- மேலே உள்ள படத்திற்கும் செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.......

Friday, November 20, 2009

மாட்டினா மாட்டினதுதான்

மாட்டிகிட்டு எப்பிடி முழிக்கிறாங்க பாருங்க ..................










அப்பிடியே உங்க ஓட்டையும் போட்டிட்டு போங்கப்பா.........

குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து ஒரே குடும்பத்தில் 3பேர் தற்கொலை




இடைப்பாடி அருகே குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து குடித்து கணவர், கர்ப்பிணி மனைவி, மகன் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லையால் இந்த முடிவை எடுத்தார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மேல்கொட்டாயூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (35). கரும்பு வெட்டும் தொழிலாளி. மனைவி சாந்தி (25). இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. அருண் (4), நந்தகுமார் (5) என்ற மகன்கள் இருந்தனர். இன்று காலை வெகுநேரமாகியும் செந்திலின் வீடு திறக்கப்படவில்லை. யாரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர். பதில் இல்லாததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு செந்தில், சாந்தி, அருண் மூவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். சிறுவன் நந்தகுமாரை காணவில்லை. தகவல் கிடைத்து வந்த உறவினர்கள், இதுகுறித்து இடைப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் காலி குளிர்பான பாட்டில், தென்னை மரத்தில் பூச்சிகளை அழிக்க வைக்கப்படும் விஷ மாத்திரை பாக்கெட், ஸ்வீட் பாக்கெட் கிடந்தன. போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: கடந்த 20 நாட்களுக்கு முன்பு வைகுந்தம் அருகே பெரிய தாண்டவனூரில் உள்ள தாய் வீட்டுக்கு மகன்களுடன் சாந்தி சென்றிருந்தார். கோயில் திருவிழா நடப்பதால், ஒரு வாரத்துக்கு முன்பு செந்திலும் அங்கு சென்றார். திருவிழா முடிந்து, நேற்று காலை எல்லாரும் இடைப்பாடி வந்தனர். சிறிது நேரத்தில் சாந்திக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மனைவியை இடைப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு செந்தில் அழைத்துச் சென்றார். குழந்தைகளும் உடன் சென்றனர். ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பும்போது, இடைப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஸ்டூடியோவில் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். பின்னர், தியேட்டரில் பகல் காட்சி பார்த்துவிட்டு ஸ்வீட் பாக்கெட், அரை லிட்டர் குளிர்பானம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர்.

3 பேர் சடலம் மட்டுமே வீட்டுக்குள் கிடந்தது. மூத்த மகன் நந்தகுமாரை காணவில்லை. அவன் எங்கு போனான், என்ன ஆனான், அவனுக்கும் விஷம் கொடுத்தார்களா என்ற தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. சாந்தி, பல ஆண்டாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பாதிக்கும் பணம் மருந்து, மாத்திரைக்கே சரியாகப் போகிறது என அடிக்கடி புலம்பி வந்துள்ளனர். கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சாந்தி தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம் என்ற நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.