Thursday, October 8, 2009

சந்திக்கு வந்த கத்தரிக்காய்கள்

சினிமா நடிகைகளுக்கு இது போதாத காலம் போல தெரிகிறது.
இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய பேச்சு புவனேஸ்வரி கைதும் அதன்பின்பு
நடந்தேறிய சம்பவங்களும் தான். இன்று ஊரே பார்த்து கைகொட்டி சிரித்து காறித்துப்பும் அளவுக்கு வந்துவிட்டது. பொதுவாக அந்த நடிகருடன் காதல் இந்த நடிகருடன் காதல் என்ற செய்திகள் நடிகைகளைப்பற்றி வருவது வழக்கம்.
ஆனால் இப்போது ஒருபடி மேலே போய் ஊருடனேயே காதல் என்று வந்துவிட்டது.

2

அதிலும் நடிகர் சங்கம் உடனடியாக நடத்திய பொதுக்கூட்டம் சும்மா இருந்தவனையும் இதைப்பற்றி ஆராயவைத்துவிட்டது. பத்திரிக்கைகாரர்கள் சினிமா விடயத்தில் சற்று அதிகமாகவே கற்பனை பண்ணுவது வழமை.
எது எப்படியோ ஊரைக்கூட்டி தாம் சொல்ல வேண்டியவற்றை சொல்லி விட்டார்கள். அதிலும் சில நடிகர்கள் மேடையில் பேசிய பேச்சு இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவையாக கூட மாறலாம்.

சரத்குமார்- "ஒருவேளை இந்தப் பட்டியலில் என் மனைவி ராதிகா பெயர் இடம்பெற்றிருந்தால்… அய்யோ… நினைக்கவே முடியவில்லை. அவரை இந்நேரம் உயிரோடே பார்த்திருக்க முடியாது "(சொல்லிவிட்டு அழுதார்).
ராதிகா பெயர் இடம்பெறாததுதான் அவரது வருத்தமா? ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் ராதிகாவையும் சரத்குமாரையும் பற்றி வந்த செய்திகளை வாசித்தவர்களுக்கு இது புரியும்.

அருண்விஜய்- “எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அந்த செய்தியை எழுதிய ரிப்போர்ட்டர் மற்றும் அலுவலகத்தில் உள்ள நான்கு பேரையாவது அடித்து துவம்சம் செய்து இழுத்து வந்து எங்கம்மா (மஞ்சுளா) காலடியில் போட்டிருப்பேன். ஆனால் சங்கம் என்னைத் தடுத்துவிட்டது…”
அண்ணே!! உங்கள் கோபம் எனக்கு புரிகிறது. இது ஒன்னும் மலை மலை சூட்டிங் இல்லை. நீங்கள் கோபப்படுவது நியாயம்தான். ஆனாலும் உண்மை கொஞ்ச நாட்களில் வெளிவரும். அப்போது யார் நல்லவங்கண்ணு புரியும்.

3

எல்லாவற்றையும் விட பெரிய விடயம் விவேக் பேசியது தான்.

விவேக்- "டேய்… எங்களைப் பத்தியா மேட்டர் போடுறீங்க… இப்ப நான் போடறேன் மேட்டர்… உங்க ஆயா, அம்மா, மனைவி, அக்கா - தங்கச்சிகளை அனுப்புங்கடா… அவங்களை மார்ப்பிங்ல (Morphing) ஜட்டியோட நான் மாத்தி தர்றேன்… அதைப் போடு உன் பத்திரிகையில"
விவேக் ஆபாச sms அனுப்பியதற்காக ஒரு நடிகை போலிசுக்கு போனது எத்தனை பேருக்கு தெரியும்? அப்படிப்பட்டவரின் பேச்சு அந்த மேடையில் தேவையா?

எல்லாவற்றையும் விட தினமலர் பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷகீலா வந்திருப்பது room போட்டு சிரிக்க வேண்டிய விடயம்.

Photobucket

கமல் உண்மையிலேயே பெரிய மனுஷன் தான்.
அவர் புறக்கணித்திருப்பது பாராட்டக்கூடிய விடயம்.
ஒருவேளை கமலுக்கு சில உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு!!!!
ஆனால் அவர் புறக்கணித்ததற்கு வேறு சில காரணங்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எது எப்படியிருப்பினும் எந்த தப்பும் செய்யாத பெண்களை இவ்வாறு இம்சித்திருப்பது ஆண்டவனுக்கே பொறுக்காது. ( குறிப்பிட்ட நடிகைகள் தப்பு செய்யாத பட்சத்தில்) !!!!
இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும்!!!!.

மீண்டும் சந்திப்போம்!! சிந்திப்போம் !!!
மறக்காமல் ஓட்டைப் போடுங்கள்!!!