Monday, September 21, 2009

தமிழன் தமிழன்தான்

Photobucket

எமதர்மராஜா சித்திரகுப்தனுடன் இறந்தவர்களின் எண்ணிக்கை பிரேதங்கள் எல்லாம் முறையாகப் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதைப் பார்வையிடச் சென்றாராம். {சும்ம்மா ஒரு கற்பனைதான்}
உடனே நம்ம சித்திரகுப்தன் ஒவ்வொரு பிரேதக் கிணறுகளையும் காட்டிக்கொண்டு செல்கிறான்.

யமன் - "இது என்ன? இந்தக் கிணறு திறந்தபடியே இருக்கு? வலைபோட்டு பாதுக்காக்கவும் இல்லை. பூட்டையும் காணோம். ஏன்?"

சித்திரகுப்தன் - "இது பிரிடிஷ் காரருடையது!!! இவை வெளியேறக்கூடாது என்று எழுதி வைத்தால் வாசித்து விட்டு வெளியேற மாட்டாது. பூட்டு போடவோ வலை போட்டு மூடவோ தேவையில்லை.!!!!!"

யமன் - "இந்தப் பிரேதக் கிணறு யாருடையது.? எழுதி வைத்தும் இருக்கு. வளையும் போட்டிக்கு."

சித்திரகுப்தன்- " இது சீனருடையது. வெளியேறக்கூடாது என்று எழுதி வைத்தாலும் முயற்சி பண்ணி வெளியேறப் பார்க்கும். ஆகவே வலை போட்டு மூடியுள்ளேன்."

இப்படியே எமதர்மராஜா எல்லா பிறேதக்கினருகளையும் வரிசையாக பார்வையிடும்போது கடைசியாக ஒரு பிறேதக்கினறு வலையால் மூடப்படாமலும் பூட்டு போடாமலும் இருந்தது.

யமன்- "டேய் சித்திரகுப்தா!!! என்னடா இது? இந்த கிணறுக்குள் இருந்து பிரேதங்கள் வெளியேற மாட்டாதா "

சித்திரகுப்தன் -" ஹி ஹி ஹி !!! இது நம்ம தமிழ் மக்களுடையது. ஒரு பிரேதம் மேலே ஏறினால் மற்றைய பிரேதங்கள் ஏற விடாது கீழே இழுத்து விடும். கடைசி வரையில் எந்த பிரேதமும் மேலே வரும் , ஆனா வராது. !!!!! இதுக்கு பாதுகாப்பே தேவையில்லை .."

யமன்- டேய் !!! பூலோகத்தில மட்டும் இல்ல. மேல்லோகதிலையும் தமிழன் தமிழன் தாண்டா.