Wednesday, November 25, 2009

நடிகர் குணால் கொலை வழக்கு கைதான நடிகை லவீனாவிடம் போலீஸ் விசாரணை




நடிகர் குணால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகை லவீனா பாட்டியாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
காதலர் தினம்’, ‘புன்னகை தேசம்உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் குணால் (30). போஜ்புரி மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மும்பை புறநகர் பகுதியான வெர்சோவா பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் படுக்கை அறையில் இருந்த பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் குணால் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், குணாலின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை ராஜேந்திரா, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது மகனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பை கோர்ட் உத்தரவிட்டது. வெர்சோவா போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். தற்கொலை வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

குணால் இறந்தபோது, பிரபல பாலிவுட் நடிகை லவீனா பாட்டியா அங்கு இருந்தார் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, லவீனா பாட்டியாவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவலை வெர்சோவா போலீஸ் இன்ஸ்பெக்டர் கடேகார் தெரிவித்தார். லவீனாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments:

Post a Comment