Tuesday, January 26, 2010
போலீஸ் போல நடித்து பெண்ணிடம் நகை அபேஸ்
வேளச்சேரி 100 அடி பைபாஸ் சாலையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி ருக்மணி (68). மாலை நேரத்தில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் தரமணி 100 அடி சாலையில் வாக்கிங் சென்றுள்ளார் ருக்மணி.
அகர்வால் கண் மருத்துவமனை அருகில் சென்றபோது, அங்கு நின்றிருந்த டிப்டாப் வாலிபர், ‘நான் போலீஸ், உங்களை 2 பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். உடனே வீட்டுக்கு போங்கள்’ என்று கூறி ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏற்றினார். பின்னர், அவரது 6 பவுன் செயினை வாங்கி ஒரு பேப்பரில் சுற்றிக் கொடுத்துள்ளார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது பேப்பரில் நகை இல்லை.
புகாரின்படி வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து மர்ம வாலிபரை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment