பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கோழிகறி சாப்பிடுவதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். கோழி கறிக்குப் பிரபலமாயிருந்தது அந்த ஹோட்டல் .
பல நாடுகளில் வேலை செய்த ஒருவர் இந்த ஹோட்டலில் சாபிட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. அவர் உணவு பரிமாருகிறவரைப்பார்த்து "இது கோழிக்கறியல்ல . குதிரைக்கறியின் ருசி வருகிறதே! உண்மையை சொல் . இது குதிரைக்கறி தானே " என்று கேட்டார். இல்லை சேர் கோழிகறி தான் என்றான் அவன்.
"கோழி கறிக்கும் குதிரைக்கறிக்கும் நன்கு வித்தியாசம் தெரியும் எனக்கு" என்று சிரித்தபடி கேட்டார் வந்தவர்!
உணவு பரிமாறுபவர் மெதுவாக அவரிடம் கோழிகறியின் ருசிக்காக கொஞ்சம் குதிரைக்கறி சேர்ப்பது உண்டு என்றான்.
கொஞ்சம் என்றால் எந்த அளவில் சேர்ப்பிர்கள் என்று வந்தவர் கேட்டார். மறுபடியும் தயக்கத்துடன் அவன் "சம அளவு குதிரை கறியும் சம அளவு கோழிகறியும் சேர்த்து சமைப்பார்கள் " என்றான்.
அதெப்படி சம அளவு என்றால் என்ன மாதிரி ? பொய் சொல்லாமல் சொல்லு என்று வந்தவர் திரும்பக்கேட்டார்.
அவன் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு மெதுவாக சொன்னான் "ஒரு கோழிக்கு ஒரு குதிரை வீதம் சமைப்போம் " என்று சொல்லி முடித்தான்.
வந்தவருக்கு தலை சுற்றியது.
நான் இதை எழுதி முடிக்கும் வரை நிற்கவில்லை .
மீண்டும் சந்திப்போம்.
Thursday, May 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
can u tell me the name of the hotel..
(())(())(()()()))((()) எனக்கும் தலை சுத்துது :))))))))
=))அந்தூர்ல கோழி அவ்வளவு பெரிசோ இல்ல குதிரை அவ்வளவு சிறிசோ!
sema kadi...sir
Post a Comment